என் மலர்
செய்திகள்

கைது
போளூர் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது
போளூர் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:
போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், அண்ணாமலை மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது போளூர் வழியாக கரைப்பூண்டி செய்யாற்றில் இருந்து மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்த போளூர் டவுன் பகுதியைச் சேர்ந்த தினகரன் (வயது 32), செல்வராஜ் (47) ஆகிய 2 பேரை போலீசார் மடக்கி கைது செய்தனர். அவரது மாட்டுவண்டியை மணலுடன் பறிமுதல் செய்தனர்.
Next Story






