search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திய 183 ஆட்டோக்கள் மீது வழக்குப்பதிவு

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியது தொடர்பாக 183 ஆட்டோக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோக்கள் அனுமதியின்றி உள்ளே சென்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் வேலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் கடந்த 2 நாட்களாக அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

    அதன்படி நேற்று முன்தினம் 64 ஆட்டோக்கள் மீதும், நேற்று 119 ஆட்டோக்கள் மீதும் என மொத்தம் 183 ஆட்டோக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. இனியும் பழைய பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
    Next Story
    ×