என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
முதல் மனைவிக்கு மிரட்டல் விடுத்த கிராம நிர்வாக அதிகாரி உள்பட 5 பேர் மீது வழக்கு
ஈரோடு அருகே முதல் மனைவிக்கு மிரட்டல் விடுத்ததாக கிராம நிர்வாக அதிகாரி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 38). இவர் சூரம்பட்டிவலசு கிராம நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
இவருக்கும், திருப்பூர் தாராபுரம்ரோடு பி.கே.ஆர்.காலனியை சேர்ந்த ஜமுனாதேவிக்கும் (31) கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
கடந்த 2018-ம் ஆண்டு ஈரோடு ஆசிரியர்காலனியை சேர்ந்த ஜான்சி (26) என்பவரை கார்த்திகேயன் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்தநிலையில் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் ஜமுனாதேவி தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரில், விவாகரத்து பெற சொல்லி தன்னை கணவர் வற்புறுத்துவதாகவும், அவர்களது குடும்பத்தினர் தன்னை மிரட்டுவதாகவும் கூறி இருந்தார்.
இதைத்தொடர்ந்து ஜமுனாதேவியின் கணவர் கார்த்திகேயன், மாமனார் சுப்பிரமணி (60), மாமியார் தங்கமணி (50), 2-வது மனைவி ஜான்சி (26), அவரது தாய் ராஜாத்தி மேரி (45) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






