search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஊரப்பாக்கத்தில் மொபட்டில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

    செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் மொபட்டில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் கந்தன் தெருவை சேர்ந்தவர் இதயதுல்லா (வயது 19). இவர் தனது மொபட்டில் ஊரப்பாக்கம் கூட்ரோடு அருகே செல்லும்போது அங்கு போலீசார் நிற்பதை கண்டதும் வேகமாக செல்ல முயன்றார். இதனை கவனித்த போலீசார் இதயதுல்லாவை மடக்கி பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தார். 

    இதனையடுத்து மொபட் சீட் கவர் அடியில் போலீசார் சோதனை செய்தபோது அதில் ¼ கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து இதயதுல்லாவை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 

    நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதயதுல்லாவிடம் இருந்து ஒரு மொபட், ¼ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×