என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கழிஞ்சூரில் மது விற்ற கணவன்-மனைவி கைது
Byமாலை மலர்21 Dec 2020 10:13 AM GMT (Updated: 21 Dec 2020 10:13 AM GMT)
கழிஞ்சூரில் மது விற்ற கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி:
காட்பாடி கழிஞ்சூர் ரெயில்வே கேட் அருகே கள்ளத்தனமாக மது விற்பனை நடந்து வந்தது. இதனை கணவன் மனைவி இருவரும் செய்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று கழிஞ்சூர் ரெயில்வே கேட் அருகே மது வாங்க சென்றபோது ஏற்பட்ட தகராறில் ஜாப்ராப் பேட்டை ராணுவ வீரர் யோகராஜ் கொலை செய்யப்பட்டார். அவருடைய நண்பர்கள் 2 பேர் படுகாயமடைந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ரெயில்வே கேட் அருகே மது விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த குமார் (வயது 47) அவருடைய மனைவி நிர்மலா (45) ஆகியோரை விருதம்பட்டு போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் தொடர்ந்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
இவர்களுக்கு எந்த டாஸ்மாக் கடையில் இருந்து மொத்தமாக மது விற்பனை செய்யப்பட்டது. யார் விற்பனை செய்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X