search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருமருகல் அருகே சாராயம் கடத்திய 2 பேர் கைது

    திருமருகல் அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா்.
    திட்டச்சேரி:

    திருமருகல் அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரிலும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரிலும் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில போலீசார் ஈடு்பட்டனர். இதேபோல் ஏனங்குடியில் திருக்கண்ணபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வேகமாக 2 மோட்டார்சைக்கிள் வந்தது. இந்த மோட்டார் சைக்கிள்களை சந்தேகத்தின்பேரில் மறித்து சோதனை நடத்தினர்.

    சோதனையில் மோட்டார் சைக்கிள்களில் 2 மூட்டைகளில் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 200 சாராயம் பாட்டில்கள் இருந்தன. இதை தொடா்ந்து போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினா். இதில் அவா்கள், மானாம்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த தனபால் (44), அதே பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் ஜெகதீசன் (வயது 35) என்பதும், இவா்கள் திருவாரூர் பகுதிக்கு புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து 200 சாராய பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனா்.
    Next Story
    ×