என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அந்தியூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

    அந்தியூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி மாக்கள் புதூரை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவர் இறந்துவிட்டார். அவருடைய மனைவி சம்பூரணம் (வயது 52). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த சம்பூரணம் கடந்த 13-ந் தேதி விஷத்தை குடித்துவிட்டு் வீட்டில் மயங்கி கிடந்தார்.


    இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சம்பூரணத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை சம்பூரணம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×