என் மலர்tooltip icon

    செய்திகள்

    நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படுகை அணை
    X
    நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படுகை அணை

    நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படுகை அணையில் வெள்ளப்பெருக்கு

    நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படுகை அணையிலும் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    அரியாங்குப்பம்:

    விழுப்புரம் மாவட்டம் வீடுர் அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நீரானது ஊசுடு ஏரி வந்தடைந்த பிறகு தான் சுண்ணாம்பாற்றில் வருவது வழக்கம். தற்போது ஊசுட்டேரி நிரம்பி காணப்படுவதால், தற்போது நேரடியாக சுண்ணாம்பாற்றில் மழை நீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் எவ்வித முன்னறிவிப்பு இல்லாததால் கரையோரத்தில் உள்ள கிராமங்களில் வெள்ள நீர் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் வில்லியனூர் பகுதி மற்றும் நோணாங்குப்பம் ஆகிய பகுதிகளில் தாழ்வான கிராமங்கள் பாதிக்கப்படக்கூடும் என தெரிகிறது.

    மேலும் இறுதியாக உள்ள நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படுகை அணையிலும் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் படகுகுழாமில் உள்ள படகுகுகளை கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் படகு போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×