என் மலர்
செய்திகள்

கருவாடு
நாகையில் கருவாடு தயாரிக்கும் பணி மும்முரம்
நாகையில் கருவாடு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கருவாடு காயவைக்கும் தளங்களில் மழைநீா் தேங்காமல் நடவடிக்கை எடுக்க உற்பத்தியாளா்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் கருவாடு காயவைக்கும் தளங்கள் உள்ளன. இங்கு குடிசைகள் அமைத்து 100-க்கும் மேற்பட்டவர்கள் கருவாடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெத்திலி, வாளை, கிழங்காமீன், ஓட்டாம்பாறை, பூக்கெண்டை, திருக்கை, சேதமடைந்த வஞ்சிரம் உள்ளிட்ட பல்வேறு வகை கருவாடுகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் கருவாடுகள் திருவாரூர், தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, சேலம், வேலூர் மற்றும் ஆந்திரா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அக்கரைப்பேட்டை கருவாடு காயவைக்கும் தளத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 கிலோ முதல் 1 டன் வரை கருவாடு தயாரிக்கப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு கருவாடு வர்த்தகம் நடைபெறும். நாகையில் தயாரிக்கப்படும் கருவாடுக்கு தனி மவுசு உண்டு.
இந்த நிலையில் நிவர், புரெவி என தொடர் புயல்கள் காரணமாக நாகை விசைப்படகு மீனவர்கள் கடந்த 15 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கனமழையால் நாகை அக்கரைப்பேட்டை கருவாடு காயவைக்கும் தளத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் கருவாடு உற்பத்தி மொத்தமாக முடங்கியது.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றதால் கருவாடு தயாரிக்க தேவையான அனைத்து வகையான மீன்களும் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்தது. இதை வைத்து தற்போது கருவாடு தயாரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கருவாடு உற்பத்தியாளர் சத்யா கூறியதாவது:-
நிவர், புரெவி என தொடர் புயல்கள் காரணமாக கருவாடு உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது. தற்போது விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்வதால் கருவாடுக்கு தேவையான மீன்கள் கிடைக்கிறது. இதை வைத்து கருவாடு உற்பத்தி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். இங்கு இருந்து பல்வேவறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர் உள்ளூர் மக்களும் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக ஓட்டம் பாறை கருவாடு அதிக அளவில் விற்பனையாகிறது.
மழை காரணமாக கருவாடு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் ரூ.150-க்கு விற்ற பாறை கருவாடு ரூ.250-க்கும், ரூ.30-க்கு விற்ற கெளுத்தி கருவாடு ரூ.70-க்கும், ரூ.110-க்கு விற்ற வாளை ரூ.150-க்கும், ரூ.40-க்கு விற்ற ஓட்டாம்பாறை ரூ.70-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மழைக்காலங்களில் கருவாடு காயவைக்கும் தளத்தில் தண்ணீர் தேங்குவதால் தொழில் முற்றிலுமாக முடங்கி் போகிறது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தண்ணீரை வெளியேற்ற வேண்டியுள்ளது. அதுவரை சாலையில் கருவாட்டை காய வைக்கும் நிலை உள்ளது. எனவே கருவாடு காய வைக்கும் தளத்தில் மழை நீர் தேங்காதவாறு மேடுப்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் கருவாடு காயவைக்கும் தளங்கள் உள்ளன. இங்கு குடிசைகள் அமைத்து 100-க்கும் மேற்பட்டவர்கள் கருவாடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெத்திலி, வாளை, கிழங்காமீன், ஓட்டாம்பாறை, பூக்கெண்டை, திருக்கை, சேதமடைந்த வஞ்சிரம் உள்ளிட்ட பல்வேறு வகை கருவாடுகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் கருவாடுகள் திருவாரூர், தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, சேலம், வேலூர் மற்றும் ஆந்திரா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அக்கரைப்பேட்டை கருவாடு காயவைக்கும் தளத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 கிலோ முதல் 1 டன் வரை கருவாடு தயாரிக்கப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு கருவாடு வர்த்தகம் நடைபெறும். நாகையில் தயாரிக்கப்படும் கருவாடுக்கு தனி மவுசு உண்டு.
இந்த நிலையில் நிவர், புரெவி என தொடர் புயல்கள் காரணமாக நாகை விசைப்படகு மீனவர்கள் கடந்த 15 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கனமழையால் நாகை அக்கரைப்பேட்டை கருவாடு காயவைக்கும் தளத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் கருவாடு உற்பத்தி மொத்தமாக முடங்கியது.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றதால் கருவாடு தயாரிக்க தேவையான அனைத்து வகையான மீன்களும் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்தது. இதை வைத்து தற்போது கருவாடு தயாரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கருவாடு உற்பத்தியாளர் சத்யா கூறியதாவது:-
நிவர், புரெவி என தொடர் புயல்கள் காரணமாக கருவாடு உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது. தற்போது விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்வதால் கருவாடுக்கு தேவையான மீன்கள் கிடைக்கிறது. இதை வைத்து கருவாடு உற்பத்தி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். இங்கு இருந்து பல்வேவறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர் உள்ளூர் மக்களும் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக ஓட்டம் பாறை கருவாடு அதிக அளவில் விற்பனையாகிறது.
மழை காரணமாக கருவாடு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் ரூ.150-க்கு விற்ற பாறை கருவாடு ரூ.250-க்கும், ரூ.30-க்கு விற்ற கெளுத்தி கருவாடு ரூ.70-க்கும், ரூ.110-க்கு விற்ற வாளை ரூ.150-க்கும், ரூ.40-க்கு விற்ற ஓட்டாம்பாறை ரூ.70-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மழைக்காலங்களில் கருவாடு காயவைக்கும் தளத்தில் தண்ணீர் தேங்குவதால் தொழில் முற்றிலுமாக முடங்கி் போகிறது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தண்ணீரை வெளியேற்ற வேண்டியுள்ளது. அதுவரை சாலையில் கருவாட்டை காய வைக்கும் நிலை உள்ளது. எனவே கருவாடு காய வைக்கும் தளத்தில் மழை நீர் தேங்காதவாறு மேடுப்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Next Story






