என் மலர்
செய்திகள்

சுதந்திர போராட்ட தியாகி துரைராஜ்
101 வயதான சுதந்திர போராட்ட தியாகி துரைராஜ் மரணம் - நேதாஜி படையில் பணியாற்றியவர்
நேதாஜி படையில் பணியாற்றிய 101 வயதான சுதந்திர போராட்ட தியாகி துரைராஜ் மரணம் அடைந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரியத்தை சேர்ந்தவர் எஸ்.துரைராஜ். இவர் சுதந்திர போராட்ட காலத்தில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர். சுதந்திரத்துக்காக போராடியதற்காக மலேசிய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர், சுதந்திரத்துக்கு பின்னர் நாடு திரும்பினார். அவர் ஈரோட்டில் தையல் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இவருக்கு 7 மகன்-மகள்கள் உள்ளனர். கடந்த ஆண்டு 100 வயதை கடந்து 101 வயதில் வாழ்ந்து கொண்டிருந்த தியாகி துரைராஜ் நேற்று பிற்பகலில் மரணம் அடைந்தார்.
கடந்த சுதந்திர தினம் அன்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் மற்றும் அதிகாரிகள் தியாகி துரைராஜ் வீட்டுக்கு நேரடியாக சென்று சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தியாகியின் மரண செய்தி கேட்டு, உறவினர்கள், குடும்ப நண்பர்கள் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அவரது இறுதி சடங்குகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு எல்லைமாரியம்மன் கோவில் அருகே உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் நடக்கிறது.
ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரியத்தை சேர்ந்தவர் எஸ்.துரைராஜ். இவர் சுதந்திர போராட்ட காலத்தில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர். சுதந்திரத்துக்காக போராடியதற்காக மலேசிய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர், சுதந்திரத்துக்கு பின்னர் நாடு திரும்பினார். அவர் ஈரோட்டில் தையல் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இவருக்கு 7 மகன்-மகள்கள் உள்ளனர். கடந்த ஆண்டு 100 வயதை கடந்து 101 வயதில் வாழ்ந்து கொண்டிருந்த தியாகி துரைராஜ் நேற்று பிற்பகலில் மரணம் அடைந்தார்.
கடந்த சுதந்திர தினம் அன்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் மற்றும் அதிகாரிகள் தியாகி துரைராஜ் வீட்டுக்கு நேரடியாக சென்று சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தியாகியின் மரண செய்தி கேட்டு, உறவினர்கள், குடும்ப நண்பர்கள் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அவரது இறுதி சடங்குகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு எல்லைமாரியம்மன் கோவில் அருகே உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் நடக்கிறது.
Next Story






