என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீரில் மூழ்கி பலி
    X
    நீரில் மூழ்கி பலி

    சோளிங்கர் கோவில் குளத்தில் மூழ்கி 2 பேர் பலி

    சோளிங்கர் கோவில் குளத்தில் மூழ்கி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சோளிங்கர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தட்டாம் பாளையத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் ஜெகன் (வயது18). சக்திவேல் என்பவரது மகள் அபிநயா (15). அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அவர்களது உறவினர்களுடன் இன்று 10-க்கும் மேற்பட்டோர் வேன் மூலமாக ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு வந்தனர்.

    இவர்கள் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் சின்னமலை பாண்டவர் தீர்த்த குளத்தில் குளித்தனர்.

    அப்போது ஜெகன், அபிநயா இருவரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்தனர். அவர்களுடன் வந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர். அங்கிருந்த பொதுமக்கள் குளத்தில் மூழ்கிய 2 பேரையும் தேடினர். குளத்தில் சேற்றில் சிக்கியிருந்த 2 பேரின் உடல்களையும் பொதுமக்கள் மீட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த கொண்ட பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு சோளிங்கர்அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் சோளிங்கரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் சோளிங்கர் நரசிம்மர் சாமி கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

    ஆனால் கோவில் குளத்தின் பகுதிகளில் போதிய பாதுகாப்பில்லை எனவேதான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

    வெளியூர் பக்தர்கள் அதிகமாக வரக்கூடிய நாட்களில் கோவில் குளம் பகுதியில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×