என் மலர்
செய்திகள்

கைது
பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த 2 வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை
பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த வாலிபர்கள் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குளித்தலை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
குளித்தலை:
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வடிவேல் முருகன் என்பவரது மனைவி காயத்திரி (வயது 26). இவர் கடந்த செப்டம்பர் மாதம் 4-ந் தேதி தாய் செல்லம்மாளுடன் திருச்சி அருகேயுள்ள துடையூரில் நடைபெற்ற உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
கரூர் மாவட்டம் லாலாபேட்டை மேம்பாலம் அருகே அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்து வந்த 2 பேர், காயத்திரி கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர். அவர்களை காயத்திரி விரட்டி சென்றபோது, அவர்கள் இருவரும் லாலாபேட்டை ரெயில்வே சுரங்கப்பாதையில் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு அருகில் இருந்த காவிரி ஆற்றில் குதித்து தப்பினர்.
இதுகுறித்து காயத்திரி அளித்த புகாரின்பேரில், தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு ஆற்றில் குதித்து தப்பி ஓடியவர்கள் குறித்து திருச்சி மாவட்டம் தொட்டியம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து காவிரி ஆற்றில் நீந்தி வந்த அவர்கள் இருவரையும் தொட்டியம் போலீசார் பிடித்து, லாலாபேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தங்கச் சங்கிலியை பறித்து சென்றது, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த மொட்டையன் மகன் வடிவேல் (25), தஞ்சாவூரை சேர்ந்த கணேசன் மகன் அருண்குமார் (26) என்பது தெரிய வந்தது. பின்னர், போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த வடிவேல் மற்றும் அருண்குமாருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தினேஷ்குமார் தீர்ப்புகூறினார்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வடிவேல் முருகன் என்பவரது மனைவி காயத்திரி (வயது 26). இவர் கடந்த செப்டம்பர் மாதம் 4-ந் தேதி தாய் செல்லம்மாளுடன் திருச்சி அருகேயுள்ள துடையூரில் நடைபெற்ற உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
கரூர் மாவட்டம் லாலாபேட்டை மேம்பாலம் அருகே அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்து வந்த 2 பேர், காயத்திரி கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர். அவர்களை காயத்திரி விரட்டி சென்றபோது, அவர்கள் இருவரும் லாலாபேட்டை ரெயில்வே சுரங்கப்பாதையில் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு அருகில் இருந்த காவிரி ஆற்றில் குதித்து தப்பினர்.
இதுகுறித்து காயத்திரி அளித்த புகாரின்பேரில், தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு ஆற்றில் குதித்து தப்பி ஓடியவர்கள் குறித்து திருச்சி மாவட்டம் தொட்டியம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து காவிரி ஆற்றில் நீந்தி வந்த அவர்கள் இருவரையும் தொட்டியம் போலீசார் பிடித்து, லாலாபேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தங்கச் சங்கிலியை பறித்து சென்றது, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த மொட்டையன் மகன் வடிவேல் (25), தஞ்சாவூரை சேர்ந்த கணேசன் மகன் அருண்குமார் (26) என்பது தெரிய வந்தது. பின்னர், போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த வடிவேல் மற்றும் அருண்குமாருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தினேஷ்குமார் தீர்ப்புகூறினார்.
Next Story






