என் மலர்
செய்திகள்

கொடுமுடி பகுதியில் விளை நிலங்களில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்
ஈரோடு:
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், தொழிற் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலும் இதை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 3 வேளாண் சட்டங்களை கண்டித்தும், டெல்லியில் போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், கொடுமுடி அடுத்த பழனிக்கவுண்டன் பாளையம், பாம்ப கவுண்டன் பாளையம், சாணார்பாளையம், சோளங்காபாளையம், கிளாம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்கள் வீடுகள் மற்றும் விளை நிலங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடிகளை ஏற்றி விவசாயிகள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். டெல்லி செல்ல முடியாததால் சட்டத் தை எதிர்த்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி இருப்ப தாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
மஞ்சள், வாழை, கரும்பு உள்ளிட்ட விளை பொருட்களுக்கு ஏற்கனவே கட்டுபடி ஆகாத விலை உள்ள நிலையில் இது போன்ற சட்டங்களால் தங்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படும் என வேதனையுடன் தெரிவித்தனர்.






