என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பூக்களை ரோட்டில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

    மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பூக்களை ரோட்டில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சத்தியமங்கலம்:

    மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும் போராட்ட களத்தில் குதித்தன.

    நேற்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து கோம்புபள்ளத்தில் பூக்களை ரோட்டில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×