என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    செல்போன் திருடிய சிறுவன் கைது

    வேலூரில் செல்போன் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 25). இவர் சங்கரன்பாளையத்தில் உள்ள ஒரு கடையில் நின்றிருந்தபோது அங்கு வந்த 2 சிறுவர்கள் குடிக்க தண்ணீர் கேட்டனர். சேட்டு தண்ணீர் எடுக்க அருகில் சென்றபோது இரு சிறுவர்களும் சேட்டுவின் செல்போனை எடுத்துக் கொண்டு அங்கிருந்த தப்பியோடினர்.

    இதுகுறித்து பாகாயம் போலீசில் சேட்டு புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு சிறுவனை கைது செய்தனர். மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×