search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இளம்பெண்ணை வைத்து விபசாரம் - மேலாளர் உள்பட 5 பேர் கைது

    புதுவையில் தங்கும் விடுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்திய விடுதி மேலாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார்பேட்டை 100 ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள ஒரு அறையில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்ணும், 3 ஆண்களும் இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த பெண் திருவண்ணாமலையை சேர்ந்தவர் என்பதும், அவருடன் இருந்த 3 பேர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த மைக்கேல் ராஜ் (வயது 24), நெல்சன் ராகுல் (25), திருக்கோவிலூரை சேர்ந்த வினோத்குமார் (25) என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில் விடுதியின் மேலாளர் டேவிட் ராஜ், வரவேற்பாளராக பணியாற்றிய சுகுமார் ஆகியோர் விபசாரத்திற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    புதுச்சேரி சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் நேற்றிரவு புதுவை பஸ் நிலையம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு விடுதியில் விபசாரத்தில் ஈடுபட்ட 3 அழகிகள் போலீசில் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×