என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
வேலூர் மாவட்டத்தில் 34 பேருக்கு கொரோனா
வேலூர் மாவட்டத்தில் நேற்றைய பரிசோதனையில் மேலும் 34 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 50 நாட்களுக்கு மேலாக தினமும் 50-க்கும் குறைவான நபர்களுக்கு தொற்று உறுதியாகி வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நிலவரப்படி 19 ஆயிரத்து 521 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய பரிசோதனையில் மேலும் 34 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 19 ஆயிரத்து 555 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 18 ஆயிரத்து 900 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா அல்லாத மாவட்டமாக வேலூரை மாற்ற பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 50 நாட்களுக்கு மேலாக தினமும் 50-க்கும் குறைவான நபர்களுக்கு தொற்று உறுதியாகி வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நிலவரப்படி 19 ஆயிரத்து 521 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய பரிசோதனையில் மேலும் 34 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 19 ஆயிரத்து 555 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 18 ஆயிரத்து 900 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா அல்லாத மாவட்டமாக வேலூரை மாற்ற பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






