என் மலர்
செய்திகள்

முருகன்
வேலூர் ஜெயிலில் 13-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் இருக்கும் முருகன், உறவினர்களுடன் ‘வாட்ஸ் அப்’பில் பேச அனுமதிமதிக்க கோரி 13-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் உறவினர்களுடன் ‘வாட்ஸ் அப்’பில் பேச அனுமதிமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 23-ந்தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் அவரது உடல்நிலை சோர்வடைந்துள்ளது. அவருக்கு 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. அவரை ஜெயில் அதிகாரிகள், டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
நேற்றும் 13-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். உண்ணாவிரதத்தை கைவிட அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Next Story






