என் மலர்
செய்திகள்

அமைச்சர் நமச்சிவாயம்
கிரிக்கெட் வீரர் நடராஜன் பல சாதனைகள் படைக்க வேண்டும்- அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து
சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் நடராஜன் தனி முத்திரை பதிக்க மனதார வாழ்த்துகிறேன் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, கிரிக்கெட் விளையாட்டில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு படிப் படியாக கற்றுக்கொண்டு தமிழ்நாடு பிரீமியம் லீக் கிரிக்கெட் மூலம் பல வெற்றிகளை குவித்து சர்வதேச கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த நடராஜன் தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
விடாமுயற்சி, சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே நடராஜனின் முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல முக்கிய காரணம். தன்னம்பிக்கை ஒன்று மட்டும் இருந்தால் சாதித்து விடலாம் என்பதை நடராஜன் நிரூபித்து இருக்கிறார். நடராஜனின் சர்வதேச கிரிக்கெட் பயணம் சிறப்புடன் தொடர வேண்டும். மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்ல அவருடைய பந்துவீச்சு தொடர்ந்து கைக்கொடுக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அவர் கிரிக்கெட் விளையாட்டில் தனி முத்திரை பதிக்க மனதார வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story






