என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடைபயிற்சிக்கு சென்ற சாராயக்கடை உரிமையாளரை கொல்ல முயற்சி - தந்தை, மகன் மீது வழக்கு
Byமாலை மலர்4 Dec 2020 2:34 PM GMT (Updated: 4 Dec 2020 2:34 PM GMT)
நடைபயிற்சிக்கு சென்ற சாராயக்கடை உரிமையாளரை கொல்ல முயன்ற தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை இந்திரா நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 48). இவர் மணவெளி, வில்லியனூர், பாகூர், மதகடிப்பட்டு, கல்மண்டபம் ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியுடன் சாராயக்கடை நடத்தி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உறுவையாறு பகுதியை சேர்ந்த பழனி என்பவருடன் சேர்ந்து பல பகுதிகளில் சாராயக்கடை நடத்தினார்.
இந்தநிலையில் சாராயக் கடைக்கு கிஸ்தி கட்டுவது தொடர்பாக ஜனார்த்தனன், பழனி இடையே பிரச்சினை ஏற்பட்டது. நேற்று அதிகாலை ஜனார்த்தனன் நடைபயிற்சிக்கு சென்றபோது அவரை கொலை செய்யும் நோக்கில் ஒரு காரில் சிலர் பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சதியில் பழனி, அவரது மகனுக்கு தொடர்பு இருப்பதாக முதலியார்பேட்டை போலீசில் ஜனார்த்தனன் புகார் செய்தார். அதன்பேரில் பழனி, அவரது மகன் கல்யாண் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X