என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெருமாள் ஏரி நிரம்பியது - 23 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் ‘நிவர்’ புயலால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது.
இன்று காலையிலும் இந்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 218 ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக 78 ஏரிகள் முழு கொள்ளவை அடைந்துள்ளன. மற்ற 140 ஏரிகளும் 50 சதவீதம் அளவுக்கு நிரம்பி உள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 6½ அடி. தற்போது ஏரிக்கு 9,800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
தொடர்ந்து ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியின் உத்தரவின் பேரில் பெருமாள் ஏரிக்கு வந்து கொண்டிருக்கும் 9,800 கன அடி தண்ணீரை அப்படியே வெளியேற்ற உத்தர விட்டார்.
இதைத்தொடர்ந்து பெருமாள் ஏரியில் இருந்து 9,800 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அந்த தண்ணீரால் ஏரியை சுற்றியுள்ள ஆதிநாராயணபுரம், திருச்சோபுரம், ஆலப்பாக்கம், அகரம், பூண்டியாங்குப்பம், பெரியப்பட்டு, பூவாலை உள்ளிட்ட 23 கிராமங்களுக்குள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த கிராமங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதேபோல் வெள்ளப் பாதிப்பால் தவிக்கும் பொதுமக்களுக்காக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்