என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளக்காடான கடலூர் நகர் பகுதி
Byமாலை மலர்4 Dec 2020 12:03 PM GMT (Updated: 4 Dec 2020 12:03 PM GMT)
புரெவி புயல் காரணமாக பெய்த மழையால் கடலூர் நகர் முழுவதும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடானது.
கடலூர்:
புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. விடிய விடிய மழை பெய்த காரணத்தினால் கடலூர் நகர் முழுவதும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடானது.
குறிப்பாக கடலூர் மஞ்சக்குப்பம், கூத்தப்பாக்கம், பாதிரிகுப்பம், புதுப்பாளையம் ,திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், சுனாமி நகர், சான்றோர் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும், கடலூர் பாலூர் சாலை மற்றும் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் குளம் போல் காட்சி அளித்து முழுவதும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது.
கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள அம்மன் சன்னதியில் மழைநீர்சூழ்ந்து குளம் போல் காட்சி தருகிறது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
கடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் ஜே.சி.பி. எந்திரம் மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் நகராட்சியில் இன்று காலை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் தண்ணீர் வெளியேற்றுவதற்கு பணிகள் மேற்கொள்ள அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. விடிய விடிய மழை பெய்த காரணத்தினால் கடலூர் நகர் முழுவதும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடானது.
குறிப்பாக கடலூர் மஞ்சக்குப்பம், கூத்தப்பாக்கம், பாதிரிகுப்பம், புதுப்பாளையம் ,திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், சுனாமி நகர், சான்றோர் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும், கடலூர் பாலூர் சாலை மற்றும் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் குளம் போல் காட்சி அளித்து முழுவதும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது.
கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள அம்மன் சன்னதியில் மழைநீர்சூழ்ந்து குளம் போல் காட்சி தருகிறது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
கடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் ஜே.சி.பி. எந்திரம் மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் நகராட்சியில் இன்று காலை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் தண்ணீர் வெளியேற்றுவதற்கு பணிகள் மேற்கொள்ள அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X