என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜபாளையத்தில் தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்தவரை குத்திக்கொன்ற மகன் கைது
Byமாலை மலர்2 Dec 2020 9:19 AM GMT (Updated: 2 Dec 2020 9:19 AM GMT)
ராஜபாளையத்தில் தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்தவரை கத்தியால் குத்திக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு மலையடிபட்டியை சேர்ந்தவர் ராமர் (வயது 52). எலெக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மாடசாமி. அவருடைய மனைவி மாரியம்மாள் (45). இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். மாடசாமி பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். இதனால் மாரியம்மாள், மகன்களுடன் ஊரில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் அவருக்கு, ராமருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுவே நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்தனர். இதையறிந்து மாரியம்மாளின் மகன் மாடசாமி மதன் (25) மற்றும் உறவினர்கள் கண்டித்தனர்.
இருப்பினும் மாரியம்மாளுடனான தொடர்பை ராமர் கைவிடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாடசாமி மதன், ராமரை சரமாரியாக கத்தியால் குத்தினார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் ராமர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடசாமி மதனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X