என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
சூளகிரி அருகே லாரிகள் மோதல் - டிரைவர் பலி
சூளகிரி அருகே லாரிகள் மோதி கொண்ட விபத்தில் டிரைவர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பக்கமுள்ள கே.மோட்டூரை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 46). லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் சாமல்பள்ளம் அருகில் லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு லாரி, பரந்தாமன் ஓட்டிச் சென்ற லாரி மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த பரந்தாமன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






