என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு - இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் வாக்குவாதம்
Byமாலை மலர்1 Dec 2020 12:45 PM GMT (Updated: 1 Dec 2020 12:45 PM GMT)
புதுக்கோட்டையில் முககவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
கொரோனா எனும் கொடிய வைரசின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் இவை மூன்றும் அவசியம் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் அவசர சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியது.
அதைத்தொடர்ந்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போது முககவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்னர், தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் மடைதிறந்த வெள்ளம் போல சுற்றத் தொடங்கினர்.
மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்றும் வெகுவாக குறைந்தது. இதன்காரணமாக பொதுமக்கள் பலர் முககவசம் அணியாமல் வெளியே வரத் தொடங்கினர். இதனால், அபராதம் விதிக்கும் நடவடிக்கையை அதிகப்படுத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் நேற்று நகராட்சி ஊழியர்கள் ஆங்காங்கே நின்று அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நடந்து சென்றவர்களில் முக கவசம் அணியாதவர்களை பிடித்து தலா ரூ.200 அபராதம் விதித்தனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த ஒரு சிலர் இரு சக்கர வாகனத்தை திருப்பிக்கொண்டு சென்றனர். சிலர் கொரோனா தான் முடிந்துவிட்டதே பிறகு ஏன்? அபராதம் விதிக்கிறீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக முடியவில்லை, அதுவரை அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X