search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காரிமங்கலம் அருகே விஷம் குடித்து மெக்கானிக் தற்கொலை

    காரிமங்கலம் அருகே விஷம் குடித்து மெக்கானிக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரிமங்கலம்:

    காரிமங்கலம் அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துவேல். இவருடைய மகன் விஷ்வா (வயது 17). இவன் ஓசூரில் கார் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வந்தான். இவன் காரிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட விஷ்வா நேற்று முன்தினம் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தான். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவனை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஷ்வா பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×