என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
Byமாலை மலர்28 Nov 2020 8:01 AM GMT (Updated: 28 Nov 2020 8:01 AM GMT)
ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கணக்கில் வராத ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து பாகலூர் செல்லும் சாலையில் புதிய மாநகராட்சி அலுவலகம் பின்புறம் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு வாகனப்பதிவு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வரும் மக்களிடம் புரோக்கர்கள் மூலம் பணம் வசூலிக்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 698 சிக்கியது.
கணக்கில் வராத பணம் இருந்ததால் வட்டார போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளிடம், துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X