என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரிமளம் அருகே கணவன்-மனைவியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்23 Nov 2020 9:04 AM GMT (Updated: 23 Nov 2020 9:04 AM GMT)
அரிமளம் அருகே கணவன் மனைவியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:
அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி மேல்நிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சநாதன் மனைவி அந்தரி (வயது 48). இவருக்கு சொந்தமான வீட்டிற்கு எதிரே உள்ள இடத்தில் அதே கிராமத்தை சேர்ந்த சுப்பையா மகன்கள் வேலுச்சாமி, ராஜா மற்றும் ராஜா மகன் சேகர் ஆகியோர் முள்வேலி அமைத்துள்ளனர்.
இதையடுத்து அந்தரி அங்கு சென்று ஏன் இங்கே முள் வேலி அமைக்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதில் இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வேலுச்சாமி, ராஜா, சேகர் ஆகிய 3 பேரும் சேர்ந்து அந்தரியை கம்பால் தாக்கி அவருடைய கணவரை கன்னத்தில் அறைந்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அந்தரி கே. புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து கே.புதுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X