search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆட்டோ டிரைவர்களுக்கிடையே தகராறு - 14 பேர் கைது

    கடலூர் அருகே சவாரி ஏற்றுவதில் ஆட்டோ டிரைவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 33). இவர் பஸ் நிலையத்தில் உள்ள 5-ம் எண் ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் அவரது ஆட்டோ நிறுத்தத்தை சேர்ந்த டிரைவர் இரண்டாயிரம் விளாகத்தை சேர்ந்த சரத்பாபு என்பவர் 2-ம் எண் ஆட்டோ நிற்கும் இடத்தில் சவாரி ஏற்றியதாக தெரிகிறது. 

    இதை பார்த்த 2-ம் எண் ஆட்டோ நிறுத்த டிரைவர்கள் உத்திரவேல் (35), அன்புதாஸ் (32), வீரமணி (38), திவான்குமார் (30), அருள் (31), காந்தி (42), விமல் (30), சக்திவேல் (45) ஆகிய 8 பேரும் சரத்பாபுவை ஆபாசமாக பேசி நெட்டி தள்ளினர். இதை அறிந்த முருகன் அவர்களிடம் தட்டிக்கேட்டார். 

    இதனால் ஆத்திரமடைந்த 8 பேரும் முருகனை தாக்கியதாக தெரிகிறது. பதிலுக்கு முருகன், விஜய் (25), புகழேந்தி (32), சரத்பாபு (36), ஜெயமூர்த்தி (24), மந்திரமூர்த்தி என்கிற ராஜ்குமார் (28) ஆகிய 6 பேரும் 2-ம் எண் ஆட்டோ டிரைவர் கோண்டூரை சேர்ந்த திவான்குமாரை தாக்கியதாக தெரிகிறது. இது பற்றி முருகன், திவான்குமார் ஆகிய 2 பேரும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் தனித்தனியே புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பை சேர்ந்த 14 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×