என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுக்கடையில் புகுந்து திருடியவர் கைது- மது பாட்டில்கள் பறிமுதல்
Byமாலை மலர்21 Nov 2020 9:19 AM GMT (Updated: 21 Nov 2020 9:19 AM GMT)
மதுக்கடையில் புகுந்து திருடியவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை 100 அடி ரோட்டில் உள்ள மதுபான கடையில் கடந்த 15-ந்தேதி இரவு மர்ம நபர்கள் கடையின் ஜன்னல், கதவினை உடைத்து கடைக்குள் புகுந்து ரூ.1½ லட்சம் ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த மதுபான பாட்டில்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். மதுக்கடையின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
இதன்படி புதுவை வம்பாகீரப்பாளையம் திப்புராயப்பேட்டையை சேர்ந்த மனோகர் (வயது 58) என்பவர் தனது தங்கை மகன்களான திருமால் நகரை சேர்ந்த செல்வகணபதி, பிரான்சுவா ஆகியோருடன் சேர்ந்து மதுக்கடையில் புகுந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து மனோகர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 118 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள செல்வகணபதி, பிரான்சுவா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த வழக்கில் திறமையாக செயல்பட்ட போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிஷா கோத்ரா, போலீஸ் சூப்பிரண்டு மாறன் ஆகியோர் பாராட்டினார்கள்.
புதுவை 100 அடி ரோட்டில் உள்ள மதுபான கடையில் கடந்த 15-ந்தேதி இரவு மர்ம நபர்கள் கடையின் ஜன்னல், கதவினை உடைத்து கடைக்குள் புகுந்து ரூ.1½ லட்சம் ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த மதுபான பாட்டில்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். மதுக்கடையின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
இதன்படி புதுவை வம்பாகீரப்பாளையம் திப்புராயப்பேட்டையை சேர்ந்த மனோகர் (வயது 58) என்பவர் தனது தங்கை மகன்களான திருமால் நகரை சேர்ந்த செல்வகணபதி, பிரான்சுவா ஆகியோருடன் சேர்ந்து மதுக்கடையில் புகுந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து மனோகர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 118 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள செல்வகணபதி, பிரான்சுவா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த வழக்கில் திறமையாக செயல்பட்ட போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிஷா கோத்ரா, போலீஸ் சூப்பிரண்டு மாறன் ஆகியோர் பாராட்டினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X