search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    யாதமரி மண்டலம் அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை

    சித்தூர் மாவட்டம் யாதமரி மண்டலம் அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
    ஸ்ரீகாளஹஸ்தி:

    சித்தூர் மாவட்டம் யாதமரி மண்டலம் கோனாபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 39). பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்த கோவா பகுதியை சேர்ந்த சுமா (35) என்பவரை கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் சதீஷ்-சுமா பணிபுரியும் நிறுவன உரிமையாளர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நிறுவனத்தின் முழு பொறுப்பையும் சதீசிடம் ஒப்படைத்தார். சதீஷ் 4 அடுக்கு வீட்டையும் பெங்களூருவில் கட்டி வாடகைக்கு விட்டார். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக சுமா ஆடம்பர செலவுகளில் ஈடுபட்டுள்ளார். இதனை சதீஷ் கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் சுமாவின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படாததால் மனமுடைந்த சதீஷ் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பெங்களூருவில் இருந்து தன்னுடைய மகன்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு சொந்த கிராமத்திற்கு வந்துவிட்டார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் உறவினர்கள் பஞ்சாயத்து நடத்தி இருவரையும் சேர்த்து வைத்தனர். அதிலிருந்து சுமா தன்னுடைய கணவர், குழந்தைகளுடன் கோனா பள்ளியில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென சுமா மாயமானார். அவரை குடும்பத்தினர் பல்வேறு பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை.

    நேற்று காலை கிராமம் அருகில் உள்ள ஏரியில் சுமா பிணமாக கிடந்துள்ளார். தகவலறிந்ததும் யாதமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகேஸ்வரராவ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுமாவின் உடலை மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சுமா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×