என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூரில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் திருட்டு
Byமாலை மலர்20 Nov 2020 2:19 PM GMT (Updated: 20 Nov 2020 2:19 PM GMT)
வேலூரில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் தொரப்பாடி எழில்நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 52). ஒடுகத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 12-ந் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.
இதைநோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 3 பவுன் நகை, 50 கிராம் வெள்ளி பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.
இந்த நிலையில் வீடு திரும்பிய தாமோதரன் திருட்டு நடந்திருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பாகாயம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் தொரப்பாடி எழில்நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 52). ஒடுகத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 12-ந் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.
இதைநோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 3 பவுன் நகை, 50 கிராம் வெள்ளி பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.
இந்த நிலையில் வீடு திரும்பிய தாமோதரன் திருட்டு நடந்திருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பாகாயம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X