search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காரைக்குடி அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

    காரைக்குடி அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    சாக்கோட்டை போலீஸ் சரகம் புதுவயல் கவுல்கொல்லை பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 40). கொத்தனார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குமரேசனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 

    இந்நிலையில் குமரேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×