search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ரெகுநாதபுரம் அருகே மதுவிற்ற 5 பேர் கைது

    ரெகுநாதபுரம் அருகே மதுவிற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    ரெகுநாதபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் ரெகுநாதபுரம், புதுவிடுதி, பந்துவகோட்டை, முத்தன் விடுதி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த செல்லத்துரை (வயது 48), ராம் (32), அய்யாதுரை (65), ரெங்கராஜ் (38), பாக்கியராஜ் (25) ஆகிய5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×