என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருபுவனை அருகே தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் தற்கொலை
Byமாலை மலர்19 Nov 2020 8:53 AM GMT (Updated: 19 Nov 2020 8:53 AM GMT)
கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருபுவனை:
திருபுவனையை அடுத்த நல்லூர் பேட் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருள்மணி (வயது 47). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி வீரம்மாள் (வயது 41). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்தார். இந்தநிலையில் அருள்மணி அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் அவரை மனைவி வீரம்மாள் கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினமும் அருள்மணி மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பல முறை கண்டித்தும் கணவர் திருந்தாததால் மனமுடைந்த வீரம்மாள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கியபின் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து அருள்மணி திருபுவனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜய் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணவரின் குடிப்பழக்கத்தால் மனைவியின் விபரீத முடிவு குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X