search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

    முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வெளி மண்டல பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள் மற்றும் வெளி மண்டல பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன்பு மற்றும் பின்பு காப்பக பகுதியில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுவது வழக்கம்.

    பருவமழைக்கு முன்பு வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி புலிகள் காப்பகத்தின் உள் மண்டல பகுதியான கார்குடி, முதுமலை உள்ளிட்ட இடங்களில் கடந்த வாரம் நடந்தது. புலிகள் காப்பகத்தின் வெளிமண்டலத்தில் உள்ள சிங்காரா, சீகூர், தெங்குமரஹடா சரகங்களில் 349 சதுர கி.மீ. பரப்பளவு வனத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.

    இதற்காக புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் மேற்பார்வையில் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் மேற்பார்வையில் 37 குழுக்கள் நியமிக்கப்பட்டது. ஒரு குழுவில் 4 பேர் என 100-க்கும் மேற்பட்டோர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பணி வருகிற 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் பருவமழைக்கு முன்பு வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். பின்னர் மழைக்காலம் முடிவடையும் நவம்பர் மாதத்தில் பருவ மழைக்கு பின்பு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகின்றன. வனப்பகுதிகளில் வனவிலங்குகளின் நேரடி காட்சிகள், கால் தடயங்கள், எச்சங்கள், நகக்கீறல்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அடையாளம் காணப்பட்டு கணக்கெடுக்கப்படுகிறது. தாவர, மாமிச உண்ணிகள், ஊர்வன மற்றும் பறவைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உயிரினங்கள் கணக்கெடுக்கப்படும். இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் தேசிய புலிகள் காப்பக ஆணையத்திற்கு அளிக்கப்படும் என்றனர்.
    Next Story
    ×