என் மலர்
செய்திகள்

வாக்காளர் பட்டியலை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட சப்-கலெக்டர் மோனிகா பெற்றுக்கொண்டதை படத்தில் காணலாம்.
நீலகிரியில் 5 லட்சத்து 71 ஆயிரம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்கள் அதிகம்
நீலகிரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 753 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருக்கின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட மாவட்ட வருவாய் அதிகாரி நிர்மலா பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து அதன் நகலை சப்-கலெக்டர்கள் மோனிகா (ஊட்டி) , ரஞ்சித்சிங் (குன்னூர்), கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் ராஜகுமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.
ஊட்டி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 96 ஆயிரத்து 442 பேர், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 468 பேர், மூன்றாம் பாலினத்தவர் 7 பேர் என மொத்தம் 2 லட்சத்து 917 பேரும், கூடலூர் தனி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 90 ஆயிரத்து 51 பேர், பெண் வாக்காளர்கள் 94 ஆயிரத்து 304 பேர், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 357 பேரும், குன்னூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 89 ஆயிரத்து 52 பேர், பெண் வாக்காளர்கள் 97 ஆயிரத்து 424 பேர், மூன்றாம் பாலினத்தவர் 3 பேரும் என மொத்தம் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 479 பேர் உள்ளனர்.
நீலகிரியில் மொத்தம் 5 லட்சத்து 71 ஆயிரத்து 753 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் ஆண்கள் 2 லட்சத்து 75 ஆயிரத்து 545 பேர், பெண்கள் 2 லட்சத்து 96 ஆயிரத்து 196 பேர், மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 20 ஆயிரத்து 651 பேர் அதிகமாக இருக்கின்றனர்.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை ஒப்பிடும்போது தற்போது 4 ஆயிரத்து 938 வாக்காளர்கள் குறைந்து உள்ளனர். புதியதாக 2 ஆயிரத்து 317 வாக்காளர்கள் சேர்ந்து இருக்கின்றனர். இறந்து போனது, முகவரி மாறி சென்றது போன்றவற்றால் 7,255 பேர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கு வருகிற 21 மற்றும் 22-ந் தேதிகள், டிசம்பர் 12 மற்றும் 13-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட மாவட்ட வருவாய் அதிகாரி நிர்மலா பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து அதன் நகலை சப்-கலெக்டர்கள் மோனிகா (ஊட்டி) , ரஞ்சித்சிங் (குன்னூர்), கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் ராஜகுமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.
ஊட்டி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 96 ஆயிரத்து 442 பேர், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 468 பேர், மூன்றாம் பாலினத்தவர் 7 பேர் என மொத்தம் 2 லட்சத்து 917 பேரும், கூடலூர் தனி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 90 ஆயிரத்து 51 பேர், பெண் வாக்காளர்கள் 94 ஆயிரத்து 304 பேர், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 357 பேரும், குன்னூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 89 ஆயிரத்து 52 பேர், பெண் வாக்காளர்கள் 97 ஆயிரத்து 424 பேர், மூன்றாம் பாலினத்தவர் 3 பேரும் என மொத்தம் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 479 பேர் உள்ளனர்.
நீலகிரியில் மொத்தம் 5 லட்சத்து 71 ஆயிரத்து 753 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் ஆண்கள் 2 லட்சத்து 75 ஆயிரத்து 545 பேர், பெண்கள் 2 லட்சத்து 96 ஆயிரத்து 196 பேர், மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 20 ஆயிரத்து 651 பேர் அதிகமாக இருக்கின்றனர்.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை ஒப்பிடும்போது தற்போது 4 ஆயிரத்து 938 வாக்காளர்கள் குறைந்து உள்ளனர். புதியதாக 2 ஆயிரத்து 317 வாக்காளர்கள் சேர்ந்து இருக்கின்றனர். இறந்து போனது, முகவரி மாறி சென்றது போன்றவற்றால் 7,255 பேர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கு வருகிற 21 மற்றும் 22-ந் தேதிகள், டிசம்பர் 12 மற்றும் 13-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






