என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் மேலும் 42 பேருக்கு கொரோனா
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் மேலும் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நெல்லை மாநகர பகுதி, பாளையங்கோட்டை யூனியன் பகுதிகளில் தலா 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் மானூர், ராதாபுரம், களக்காடு ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 603 ஆக உயர்ந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 937 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 467 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 15 ஆயிரத்து 58 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 274 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை 135 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நெல்லை மாநகர பகுதி, பாளையங்கோட்டை யூனியன் பகுதிகளில் தலா 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் மானூர், ராதாபுரம், களக்காடு ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 603 ஆக உயர்ந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 937 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 467 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 15 ஆயிரத்து 58 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 274 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை 135 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்துள்ளனர்.
Next Story






