என் மலர்
செய்திகள்

விபத்து பலி
தட்டாஞ்சாவடி அருகே விபத்தில் கார் டிரைவர் பலி
தட்டாஞ்சாவடி அருகே விபத்தில் கார் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்குளம்:
புதுவை மேட்டுபாளையம் அருகே உள்ள காந்தி திருநல்லூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகர். இவரது மகன் பன்னீர்செல்வம் (வயது 22). கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். தட்டாஞ்சாவடி வேலை வாய்ப்பு அலுவலகம் அருகே சென்றபோது எதிரில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த பன்னீர்செல்வம் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






