search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழாவில் ஒருவருக்கு வீட்டு மனை பட்டாவை அமைச்சர் பாஸ்கரன் வழங்கிய போது எடுத்த படம்.
    X
    விழாவில் ஒருவருக்கு வீட்டு மனை பட்டாவை அமைச்சர் பாஸ்கரன் வழங்கிய போது எடுத்த படம்.

    237 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா- அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்

    சிவகங்கை அருகே 237 குடும்பங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுமனை பட்டாவை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை தாலுகா இடையமேலூர் குரூப் காந்தி நகர் கிராமத்தில் வசிக்கும் 237 குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா முன்னிலை வகித்தார். சிவகங்கை கோட்டாட்சியர் முத்துகழுவன் வரவேற்று பேசினார்.

    விழாவில் கதா் மற்றும் கிராமத்தொழில்கள் வாரியத்துறை அமைச்சா் பாஸ்கரன் 237 குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கி பேசியதாவது:-

    வீடற்ற ஏழை மக்களுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டுமென்பதே அரசின் நோக்கமாகும். தகுதி வாய்ந்த வீடற்ற ஏழை மக்களுக்கு கிராம நத்தமாக ஒதுக்கப்பட்ட நிலங்களிலிருந்து வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.

    சிவகங்கை தாலுகா இடையமேலூர் குரூப், காந்தி நகர் பகுதியில் பா்மாவிலிருந்து வந்து வசித்து வரும் குடும்பங்களுக்கு கடந்த 1972-ஆம் ஆண்டிலிருந்து சுமார் 50 ஆண்டுகளாக வீட்டுமனைபட்டா இல்லாமல் இருந்தது. பட்டா பெறுவதற்காக அவர்கள் பலமுறை முயன்றும் பயனில்லாமல் போனது. தற்போது அவா்களின் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதன் அடிப்படையில் வீட்டுமனைபட்டா வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ராஜா, சிவகங்கை தாசில்தார் மைலாவதி, மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவா் சசிக்குமார், கூட்டுறவு வங்கி இயக்குனா் பாலசந்தர், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர். கேசவன் மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
    Next Story
    ×