என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடையார்பாளையம் அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

    உடையார்பாளையம் அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் பழனிராஜன்(வயது 30). டிரைவர். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாகவும், டாக்டர்களிடம் காண்பித்தும் வலி சரியாகவில்லை என்றும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த பழனிராஜன் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கினார். 

    அவரை மீட்ட அக்கம், பக்கத்தினர் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிராஜன் நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் பழனிராஜனின் மனைவி துர்காதேவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×