என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மோதல்: வாலிபர் பலி
Byமாலை மலர்9 Nov 2020 9:49 AM GMT (Updated: 9 Nov 2020 9:49 AM GMT)
வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுபாக்கம்:
வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (வயது 30). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் கீழ் ஒரத்தூரில் உள்ள தனது மாமா வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அடரி - கீழ்ஒரத்தூர் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்ற போது, மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
இதில், படுகாயமடைந்த அசோக் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை அசோக் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X