என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரிமளம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Byமாலை மலர்5 Nov 2020 2:16 PM GMT (Updated: 5 Nov 2020 2:16 PM GMT)
அரிமளம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:
அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி அருகே உள்ள கல்லுக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி(வயது 23). விவசாயி. இவருக்கு கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவருடைய மனைவி நாகலட்சுமி, மகப்பேறுக்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.
இந்நிலையில், மனைவியை தன் வீட்டிற்கு வருமாறு கார்த்தி அழைத்ததாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மனவேதனை அடைந்த கார்த்தி, வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X