என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

    புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை போலீசார் ஓணம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடை உரிமையாளர் ரவி(வயது41) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் தேன்கனிக்கோட்டை போலீசார், அஞ்செட்டி சாலையில் உள்ள ஒரு மளிகை கடைகளில் சோதனை செய்தனர். அதில் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வைத்திருந்த கடை உரிமையாளர் செல்வம்(50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×