என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பர்கூர் அருகே மோட்டார்சைக்கிள்-கார் மோதல்: பேக்கரி ஊழியர் பலி

    பர்கூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பேக்கரி ஊழியர் பலியானார்.
    பர்கூர்:

    பர்கூரை அடுத்த ஜி.நாகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 41). இவர் சென்னையில் உள்ள பேக்கரி ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் பர்கூரில் இருந்து சென்னைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பர்கூரில் சென்னை பிரிவு சாலையில் சென்றபோது கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் மாதையன் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாதையன் இறந்து விட்டார்.

    இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×