என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நெல்லிக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்: லேப் டெக்னீசியன் பலி

    நெல்லிக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் லேப் டெக்னீசியன் பலியானார்.
    நெல்லிக்குப்பம்:

    நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் அமர்நாத் பெயிண்டர். இவருடைய மனைவி நித்யா (வயது 32). இவர் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது உறவினரான கடலூர் சுத்துக்குளத்தை சேர்ந்த விஷ்ணுப்பிரியன்(25) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் நெல்லிக்குப்பத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நித்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

    பலத்த காயமடைந்த விஷ்ணுப்பிரியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×