என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூட்டுறவு சங்கம் மூலம் மலிவு விலையில் பெரிய வெங்காயம் விற்பனை- கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்31 Oct 2020 12:26 PM GMT (Updated: 31 Oct 2020 12:26 PM GMT)
பவானி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலம் மலிவு விலையில் பெரிய வெங்காய விற்பனையை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்.
பவானி:
பவானி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பெரிய வெங்காயத்தை மலிவு விலையான ரூ.45-க்கு விற்பனை செய்வதை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பவானி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பெரிய வெங்காய விற்பனையை தொடங்கி வைத்தார்.
இதில் ஈரோடு வடக்கு மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் செந்தில் குமரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கே.கே.விஸ்வநாதன் மற்றும் சின்னபுலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முதல் கட்டமாக 1 டன் வெங்காயம் சுமார் 4 மணி நேரத்தில் விற்பனையானது. இதைத்தொடர்ந்து அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும், ரேஷன் கடைகளிலும் மலிவு விலையில் பெரிய வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X