என் மலர்
செய்திகள்

கைது
காவேரிப்பட்டணம் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
காவேரிப்பட்டணம் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் போலீசார், அண்ணா நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, காவேரிப்பட்டணம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த அய்யப்பன் (வயது 46) என்பவர், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் போச்சம்பள்ளி போலீசார், சந்தை வாசல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற, வடமலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ரமேஷ் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






