என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் தினமும் 400 பேரிடம் சளி மாதிரி சேகரிப்பு
Byமாலை மலர்29 Oct 2020 6:14 PM GMT (Updated: 29 Oct 2020 6:14 PM GMT)
குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் தினமும் 400 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.
கோத்தகிரி:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்துக்கு வர இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு இ-பாஸ் பெற்று வருபவர்கள் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் உள்ள குஞ்சப்பனை சோதனைச்சாவடி வழியாக நீலகிரி மாவட்டத்துக்குள் வருகின்றனர். அங்கு அவர்களுக்கு உடல் வெப்ப சோதனை நடத்தப்படுகிறது. பின்னர் இ-பாஸ் பெற்று வருகின்றனரா? என்று சோதனை செய்யப்படுகிறது. மேலும் சோதனைச்சாவடிக்கு வந்து செல்பவர்களின் விவரங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற பணிகளில் காவல், சுகாதாரம், வருவாய் உள்பட அனைத்து துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அந்த வழியாக அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்களில் வருபவர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. பின்னர் அந்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுபோன்று தினமும் சுமார் 400 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. மேலும் அவர்களது விவரங்களும் பெறப்பட்டு, முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அவர்களது செல்போன் எண்ணுக்கே அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் நீலகிரியில் கொரோனா பாதிப்பு குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்துக்கு வர இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு இ-பாஸ் பெற்று வருபவர்கள் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் உள்ள குஞ்சப்பனை சோதனைச்சாவடி வழியாக நீலகிரி மாவட்டத்துக்குள் வருகின்றனர். அங்கு அவர்களுக்கு உடல் வெப்ப சோதனை நடத்தப்படுகிறது. பின்னர் இ-பாஸ் பெற்று வருகின்றனரா? என்று சோதனை செய்யப்படுகிறது. மேலும் சோதனைச்சாவடிக்கு வந்து செல்பவர்களின் விவரங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற பணிகளில் காவல், சுகாதாரம், வருவாய் உள்பட அனைத்து துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அந்த வழியாக அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்களில் வருபவர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. பின்னர் அந்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுபோன்று தினமும் சுமார் 400 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. மேலும் அவர்களது விவரங்களும் பெறப்பட்டு, முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அவர்களது செல்போன் எண்ணுக்கே அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் நீலகிரியில் கொரோனா பாதிப்பு குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X