search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பஸ்சில் வந்தவர்களுக்கு சளி மாதிரி சேகரிக்கும் பணி நடைபெற்றபோது எடுத்தபடம்.
    X
    அரசு பஸ்சில் வந்தவர்களுக்கு சளி மாதிரி சேகரிக்கும் பணி நடைபெற்றபோது எடுத்தபடம்.

    குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் தினமும் 400 பேரிடம் சளி மாதிரி சேகரிப்பு

    குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் தினமும் 400 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.
    கோத்தகிரி:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்துக்கு வர இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு இ-பாஸ் பெற்று வருபவர்கள் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் உள்ள குஞ்சப்பனை சோதனைச்சாவடி வழியாக நீலகிரி மாவட்டத்துக்குள் வருகின்றனர். அங்கு அவர்களுக்கு உடல் வெப்ப சோதனை நடத்தப்படுகிறது. பின்னர் இ-பாஸ் பெற்று வருகின்றனரா? என்று சோதனை செய்யப்படுகிறது. மேலும் சோதனைச்சாவடிக்கு வந்து செல்பவர்களின் விவரங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற பணிகளில் காவல், சுகாதாரம், வருவாய் உள்பட அனைத்து துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனினும் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அந்த வழியாக அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்களில் வருபவர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. பின்னர் அந்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதுபோன்று தினமும் சுமார் 400 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. மேலும் அவர்களது விவரங்களும் பெறப்பட்டு, முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அவர்களது செல்போன் எண்ணுக்கே அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் நீலகிரியில் கொரோனா பாதிப்பு குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
    Next Story
    ×