search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதின் கட்கரியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
    X
    நிதின் கட்கரியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    ரூ.5000 கோடியில் சென்னையில் ஈரடுக்கு மேம்பாலம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

    சென்னை துறைமுகத்தில் இருந்து புறநகர் பகுதியை இணைக்க இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்தார்.
    சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். 
    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை துறைமுகத்தில் இருந்து புறநகர் பகுதியை இணைக்க 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். 
    Next Story
    ×